மேலும்

இந்திய- பாகிஸ்தான் பிரச்சினையில் சிறிலங்கா நடுநிலை

இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவுகின்ற பிரச்சினையில், சிறிலங்கா நடுநிலை வகிப்பதாக, அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் இதுபற்றி அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் புவிசார் அரசியல் மோதல்களில் சிறிலங்கா ஈடுபடாது. அது, அரசாங்கத்தின் கொள்கை முடிவாகும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்ச் சூழ்நிலை குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, உன்னிப்பாக அவதானித்து வருவதுடன்,  அரசாங்கத்துக்கு விளக்கமளிக்கிறது.

எமது இறைமையைப் பாதுகாக்கும் வகையிலும், அணிசேரா கொள்கையின் அடிப்படையிலும் நாங்கள் செயற்படுகிறோம்.

எந்தவொரு பயங்கரவாதத்தையும் நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவோ ஆதரிக்கவோமாட்டோம்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் முயற்சிகளுக்கு எந்த நேரத்திலும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பிராந்திய பாதுகாப்பு, அமைதி மற்றும் பொதுப்பாதுகாப்பு. நோக்கங்களுக்காக நாங்கள் செயற்படுவோம்“ என்றும், சிறிலங்கா அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *