மேலும்

உள்ளூராட்சித் தேர்தல் இறுதி முடிவு- யாருக்கு, எவ்வளவு வாக்குகள், ஆசனங்கள்?

சிறிலங்காவில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 265 சபைகளில், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ள போதும், 126 சபைகளில் மட்டும் தனித்து ஆட்சியமைக்கும் பலத்தைப் பெற்றுள்ளது.

339 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்று இடம்பெற்ற தேர்தலின், முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி தேசிய மக்கள் சக்தி, 4,503,930 (43.26%) வாக்குகளைப் பெற்று, 3,926 உறுப்பினர்களைப் பெற்று, 265 சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, 2,258,480 (21.69%) வாக்குகளைப் பெற்று, 1,767 உறுப்பினர்களையும் பெற்று- 14 சபைகளின் ஆட்சியையும் கைப்பற்றியுள்ளது.

954,517 (9.17%) வாக்குகளைப் பெற்றுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு, 742 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 488,406 (4.69%) வாக்குகளுடன், 381 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன.

பொதுஜன முன்னணி 387,098 (3.72%) வாக்குகளுடன், 300 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, 307,657 (2.96%) வாக்குகளைப் பெற்று, 35 சபைகளைக் கைப்பற்றி, 377 இடங்களைப் பெற்றிருக்கிறது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 139,858 (1.34%) வாக்குகளைப் பெற்று, 6 சபைகளில் வெற்றி பெற்றிருப்பதுடன், 116 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, 89,177 (0.86%) வாக்குகளைப் பெற்று, ஒரு சபையில் வெற்றி பெற்றிருப்பதுடன், 106 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 75,268 வாக்குகளுடன், 3 சபைகளை வென்று, 60 இடங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 71,655 வாக்குகளுடன், 2 சபைகளில் வெற்றி பெற்றிருப்பதுடன், 54 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், 70,944 வாக்குகளைப் பெற்றிருப்பதுடன், 3 சபைகளை கைப்பற்றி, 101 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 39,791 வாக்குகளுடன், 1 சபையில் வெற்றி பெற்றிருப்பதுடன், 37 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *