மேலும்

ஒரு வாக்கினால் தோல்வியடைந்த யாழ். மாநகர வேட்பாளர்.

நேற்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஒரே ஒரு வாக்கினால்  மிதிவண்டிச் சின்னத்தில் போட்டியிட்ட, தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளர், வட்டார ஆசனத்தை இழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில், பெரியகடை  வட்டாரத்திலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் இந்த வட்டாரத்தில் 320 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளருக்கு, 319 வாக்குகள் கிடைத்திருந்த நிலையில் அவர், வெற்றி வாய்ப்பை ஒரு வாக்கினால் இழக்க நேரிட்டது.

சமமான வாக்குகள் வாக்குகள் கிடைத்திருந்தால், திருவுளச்சீட்டு மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *