மேலும்

மாதம்: October 2019

சஜித்தின் தேர்தல் அறிக்கை – முதலில் மகாநாயக்கர்களிடம்

புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை, நாளை மறுநாள் கண்டியில் வெளியிடப்படும் என்று, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்தமுறை தவறு செய்த தமிழர்கள் – குற்றம்சாட்டிய மகிந்த

தமிழ் மக்கள் கடந்தமுறை தவறு செய்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டிய பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தமுறை அவ்வாறான தவறைச் செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதனன்று கூட்டத்தில் 5 தமிழ்க்கட்சிகளின் இறுதி முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான முடிவை எடுப்பதற்காக, ஐந்து தமிழ்க் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் மூன்றரை மணி நேரம் பேச்சுக்களை நடத்திய போதும், இறுதி முடிவு எடுப்பதை, நாளை வரை பிற்போட்டுள்ளன.

தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட வேண்டும் – என்கிறார் கோத்தா

தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச, தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட்டு, எதிர்காலத்துக்கு செல்லத் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு

அதிபர் தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான கூட்டம் ஒன்றுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு ரணில் மகிழ்ச்சி

ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டது குறித்து,  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

அனுரகுமாரவின் அரசாங்கத்தில் 30 அமைச்சர்கள் மாத்திரம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், 30 அமைச்சர்கள் மற்றும் 30 பிரதி அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவார்கள் என்று, அந்த அமைப்பின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும், ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க உறுதியளித்துள்ளார்.

சவேந்திர சில்வாவே இராணுவத் தளபதியாக தொடருவார் – சஜித் அறிவிப்பு

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாப்பேன், அவரே சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக தொடருவார் என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றைய கலந்துரையாடலின் பின்னர் 5 தமிழ்க்கட்சிகளின் முடிவு

யாழ்ப்பாணத்தில் இன்று நடக்கவுள்ள கலந்துரையாடலின் பின்னரே, சிறிலங்கா அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று, வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி?

சிறிலங்காவில் கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு உரிமை கோரிய- உலகின் பல்வேறு இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்குக் காரணமாக இருந்த இஸ்லாமிய தேசம் எனப்படும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் படைகளின் அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.