மேலும்

நாள்: 3rd October 2019

ஐதேக மாநாட்டு நேரலை ஒளிபரப்பை நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய சம்மேளனக் கூட்டம் தொடர்பான தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பை சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

திருமணத்துக்காக பதவி உயர்த்தப்பட்ட யோஷித ராஜபக்ச

சிறிலங்கா கடற்படையில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட யோஷித ராஜபக்ச, திருமணத்துக்காக லெப்.கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

சஜித்தை நிறுத்த ஐதேக சம்மேளனம் அங்கீகாரம்

சஜித் பிரேமதாச அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு  ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு சம்மேளனக் கூட்டத்தில் இன்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் செல்ல கோத்தாவுக்கு நீதிமன்றம் அனுமதி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வரும் 9ஆம் நாள் தொடக்கம் 12ஆம் நாள் வரை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதற்கு சிறப்பு மேல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் குமார வெல்கம

சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடா விட்டால், வரும் அதிபர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு நிபந்தனைகளை விதிக்கவில்லை – சஜித்

தம்மை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும், எவரிடம் இருந்தும் ஆதரவைப் பெறுவதற்காக நிபந்தனைகளுக்கு இணங்கப் போவதில்லை என்றும் என்றும்  ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கோத்தாவுக்கு எதிரான மனு இன்றும் விசாரணை – பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை அங்கீகரிக்கக் கூடாது எனக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இரண்டாவது நாளாக இன்று நடைபெறவுள்ளது.

நாட்டு நிலவரம் பற்றியே சஜித்துடன் பேசினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐதேக குழுவினர் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தே கலந்துரையாடினர் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சின்னத்தை மாற்ற முடியுமா? – பதிலளிக்க மறுத்த தேர்தல் ஆணைக்குழு தலைவர்

நாளை மறுநாள் சனிக்கிழமை பொதுவிடுமுறை என்பதால், அதிபர் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட இதுவரை 20 பேர் கட்டுப்பணம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.