மேலும்

நாள்: 29th October 2019

அமெரிக்காவுடன் கொடை உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்திடம் இருந்து, 480 மில்லியன் டொலர் கொடையைப் பெறுவதற்கான உடன்பாட்டில், கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.

அதிபர் தேர்தல் – வாக்களிப்பு நேரத்தை மாலை 5 மணி வரை நீடிக்க முடிவு

எதிர்வரும் நொவம்பர் 16ஆம் நாள் நடக்கவுள்ள, சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம், ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகள் நாளையும் முடிவெடுக்க வாய்ப்பில்லை?

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் வரை, ஐந்து தமிழ்க்கட்சிகளும், அதிபர் தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்காது என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளுடன் சஜித் பேசத் தயாரில்லை – ஷிரால் லக்திலக

ஐந்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக, பேச்சு நடத்துவதற்கு, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தயாராக இல்லை என்று, அவரது பரப்புரைக் குழுவைச் சேர்ந்த ஷிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.

கோத்தா, மகிந்தவுக்கு எதிராக போராட்டம்

தேர்தல் பரப்புரைக்காக நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச மற்றும், அந்தக் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நல்லூர் சங்கிலியன் பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சஜித்தின் தேர்தல் அறிக்கை – முதலில் மகாநாயக்கர்களிடம்

புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை, நாளை மறுநாள் கண்டியில் வெளியிடப்படும் என்று, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்தமுறை தவறு செய்த தமிழர்கள் – குற்றம்சாட்டிய மகிந்த

தமிழ் மக்கள் கடந்தமுறை தவறு செய்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டிய பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தமுறை அவ்வாறான தவறைச் செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதனன்று கூட்டத்தில் 5 தமிழ்க்கட்சிகளின் இறுதி முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான முடிவை எடுப்பதற்காக, ஐந்து தமிழ்க் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் மூன்றரை மணி நேரம் பேச்சுக்களை நடத்திய போதும், இறுதி முடிவு எடுப்பதை, நாளை வரை பிற்போட்டுள்ளன.

தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட வேண்டும் – என்கிறார் கோத்தா

தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச, தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட்டு, எதிர்காலத்துக்கு செல்லத் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு

அதிபர் தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான கூட்டம் ஒன்றுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.