மேலும்

மாதம்: September 2019

ஐதேகவை அழித்து விட்டார் பிரபாகரன்- சுஜீவ சேனசிங்க

25 ஆண்டுகளாக ஒரு அதிபரை உருவாக்க முடியாதளவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், அழித்து விட்டார் என்று  அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் 20 அரசியல் கட்சிகள் போட்டி?

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக, 20இற்கும் அதிகமான அரசியல் கட்சிகள், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியுள்ளன.

வீரவன்சவின் குற்றச்சாட்டு – அமெரிக்கா பதில்

சிறிலங்காவில் பாதுகாப்பை தாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு

வரும் அதிபர் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர இதனை அறிவித்துள்ளார் என கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசநாயக்க தெரிவித்தார்.

குண்டுதாரிகளின் அலைபேசி உள்ளக தரவுகளை மீட்டது எவ்பிஐ

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஐந்து அலைபேசிகளின் உள்ளகத் தரவுகள் அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வாளர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அதிபர் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்ற கலைப்பு குறித்து முடிவு

19 ஆவது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் சிறிலங்கா அதிபரிடம் இருந்து நீக்கப்பட்டிருப்பதால், இந்த ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படும் அதிபர் தேர்தல்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான எந்த முடிவும் சபை உறுப்பினர்களால் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

அமெரிக்கர்கள் கொண்டு வந்த 6 பைகளில் என்ன இருந்தது? – விமல் வீரவன்ச

கொழும்பு ஹில்டன் விடுதியில் ஆறு பைகளுடன் வந்த அமெரிக்கர்கள் அதனைச் சோதனையிட அனுமதிக்கவில்லை என்றும், அமெரிக்க தூதரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பொதிகளில் என்ன இருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.

குண்டுதாரிகளை விட்டு விட்டு கோத்தாவை குடைகிறது சிஐடி – மகிந்த குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் கவனம் செலுத்தாமல், கோத்தாபய ராஜபக்சவின் மீதே குற்ற விசாரணைத் திணைக்களம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது என பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் உரை – மகிந்த அணி கொதிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பகிரங்க அறிவிப்பினால், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனுவுக்கும் இடையில் நடந்து வரும் பேச்சுக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்று எச்சரித்துள்ளார், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார.

போர்க்குற்ற விசாரணையை நடத்துவது அவசியம் – மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அது நல்லிணக்க முயற்சிகளின் நம்பகத்தன்மைக்கு அவசியமானது என்றும் மேஜர் ஜெனரல் அசோக் கே. மேத்தா தெரிவித்துள்ளார்.