மேலும்

கோத்தாவுடன் தனியான உடன்பாடு – சுதந்திரக் கட்சி முயற்சி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவுடன் தனியாக புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ள வேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரியுள்ளது.

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களான மகிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன ஆகியோர் நேற்று  சந்தித்து பேச்சு நடத்தினர்.

இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி அமைப்பது குறித்து மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவும் பேச்சுக்களை நடத்தியதை அடுத்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

அத்துடன், கோத்தாபய ராஜபக்சவுடன் தனியான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ள சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் விருப்பம் வெளியிட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *