அமெரிக்காவின் கொடை உடன்பாடு – ஜனவரி வரை காலஅவகாசம் கேட்கும் மைத்திரி
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்தின் 480 மில்லியன் டொலர் கொடை தொடர்பான உடன்பாட்டில் கைச்சாத்திடுவதற்கு, வரும் ஜனவரி மாதம் வரை கால அவகாசம் கேட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு அனுமதி அளிக்காமல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இழுத்தடித்து வருகிறார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுபற்றிப் பேசப்பட்டது. எனினும், இந்த உடன்பாட்டில் கையெழுத்திட அனுமதி அளிப்பதற்கு தனக்கு ஜனவரி மாதம் வரை கால அவகாசம் அளிக்குமாறு சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.
எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூடிய வரைவில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட வேண்டும் என அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
ஆனாலும் சிறிலங்கா அதிபர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.