சவேந்திர சில்வா நியமனம் – கூட்டமைப்பு கலக்கம்
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து மிகுந்த கலக்கமடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
”பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தனிநபரான லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இராணுவத் தளபதியாக நியமித்துள்ளமையானது, தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பெரும் அவமரியாதையாகும்.
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் இந்த நியமனத்தினால் நாங்கள் மிகுந்த கலக்கமடைந்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.