மேலும்

சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவராக மார்ட்டின் கெலி நியமனம்

சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவராக மார்ட்டின் கெலி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் கொழும்பில் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில், அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், புதிய துணைத் தூதுவர் மார்ட்டின் கெலியை, தூதரக அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

புதிய துணைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மார்ட்டின் கெலி, அமெரிக்க வெளிவிவகாரச் சேவையின் துறைசார் இராஜதந்திரியாவார்.

இவர் முன்னதாக, டுபாய், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவராவார்.

கொழும்பில் அமெரிக்க துணைத் தூதுவராகப் பணியாற்றிய ரொபேர்ட் ஹில்டன், பணி முடிந்து கடந்த ஜூலை 17ஆம் நாள் நாடு திரும்பியதை அடுத்தே, புதிய துணைத் தூதுவராக மார்ட்டின் கெலி பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *