மேலும்

அமைச்சரவைக் கூட்ட நேரத்தை மாற்றினார் மைத்திரி

அமைச்சரவைக் கூட்டங்களை இனிமேல் காலையில் நேரகாலத்துடன் நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம், செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்த அமைச்சரவைக் கூட்டங்கள் இனிமேல் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமைச்சரவைக் கூட்டங்கள் செவ்வாய்கிழமைகளில் காலை 9.30 மணிக்கே ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *