மேலும்

றிசாத் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை- பதில் காவல்துறை மா அதிபர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் அல்லது எந்தவொரு தீவிரவாத செயற்பாடுகளுடனும், முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு தொடர்புகள் இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரமும் இல்லை என சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வின் போது, தெரிவுக்குழுவின் தலைவரான ஆனந்த குமாரசிறி இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

றிசாத் பதியுதீனுக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்து நடந்து வரும் விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து, சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையிலேயே, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் அல்லது எந்தவொரு தீவிரவாத செயற்பாடுகளுடனும், முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு தொடர்புகள் இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளதாக, ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *