மேலும்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியா?- மறுக்கிறார் வேடுவர் தலைவர்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிட தாம் விரும்பவில்லை என்றும், சிறிலங்காவின் பழங்குடி வேடுவர் சமூகத்தின் தலைவரான, உருவாரிகே வன்னிலா அத்தோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனது 72 வது பிறந்தநாள் ஒரு நிகழ்வில் பேசிய அவர்,

“ ஏன் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள்.

பலர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாலும், குழப்பமான அரசியலில் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.

நாடாளுமன்றத்தில் நடப்பதைப் போல, சிறிய விடயங்களுக்காக போராடும் நடைமுறையில் இறங்க விரும்பவில்லை” என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, வேடுவர் தலைவரான, உருவாரிகே வன்னிலா அத்தோ வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *