மேலும்

மாதம்: June 2018

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி வெடிக்கிறது போராட்டம்

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், சாட்சியை அச்சுறுத்தும் வகையிலும், நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பொது பலசேனா அறிவித்துள்ளது.

வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட நிபந்தனையுடன் முதலமைச்சர் ஆதரவு

தமது பதவிக்காலத்தை நீடிப்புச் செய்து, வடக்கு மாகாண சபைத் தேர்தல் பிற்போடுவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு 4 மணி நேரம் முன்னரே வருமாறு அறிவிப்பு

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்லாகத்தில் நேற்றிரவு பதற்றம் – பொதுமக்கள் கொந்தளிப்பு

மல்லாகத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மரணமான இளைஞன், தேவாலய விழாவில் பங்கேற்ற அப்பாவி என்று, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவுக்குப் பின்னரும் பதற்ற நிலை காணப்பட்டது.

மல்லாகத்தில் குழு மோதல் – சிறிலங்கா காவல்துறை சுட்டதில் ஒருவர் பலி

மல்லாகம் பகுதியில் இன்று மாலை இரண்டு குழுக்களுக்கிடையில் நடந்த மோதலை அடுத்து, சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நிபுணர்களுடன் சிறிலங்கா வந்துள்ள இராட்சத விமானம்

அமெரிக்காவின் நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின், தேசிய சமுத்திரவியல் மற்றும் வணிமண்டல நிர்வாக பிரிவின், நிபுணர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று சிறிலங்காவுக்கு  வந்துள்ளது.

மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டில் நடக்காது – பைசர் முஸ்தபா

ஆறு மாகாண சபைகளுக்கு இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை, என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஆதரிக்காவிடின் அரசியலை துறப்பாராம் டக்ளஸ்

வடக்கு மாகாணபைத் தேர்தலில் தாம் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கப் போவதாக அறிவித்துள்ள, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இதற்கு மக்கள் முழுமையான ஆதரவை அளிக்காவிடின் தாம் அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு – சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றாராம் சிறிலங்கா அதிபர்

இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படியும் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் வலியுறுத்தலுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

சிறிலங்கா விமானப்படைக்கு இத்தாலிய விமானங்களைக் கொள்வனவு செய்ய முயற்சி?

இத்தாலியிடம் இருந்து சிறிலங்கா விமானப்படைக்கு பயிற்சி மற்றும் போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன ஆய்வு செய்துள்ளார்.