மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு 4 மணி நேரம் முன்னரே வருமாறு அறிவிப்பு

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனால், திட்டமிட்ட பயண நேரத்துக்கு நான்கு மணிநேரம் முன்னதாகவே, விமான நிலையத்துக்கு வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை இன்று தொடக்கம் மறு அறிவிப்பு வெளியாகும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் உள்ள குடியகல்வுச் சோதனைப் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *