மேலும்

மல்லாகத்தில் குழு மோதல் – சிறிலங்கா காவல்துறை சுட்டதில் ஒருவர் பலி

மல்லாகம் பகுதியில் இன்று மாலை இரண்டு குழுக்களுக்கிடையில் நடந்த மோதலை அடுத்து, சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏழாலை மற்றும் குளமன்காடு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், மல்லாகம் பகுதியில் வாள்களுடன் இன்று மாலை மோதிக் கொண்டனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த சிறிலங்கா காவல்துறையினர், மோதலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தச் சம்பவத்தில் மல்லாகத்தைச் சேர்ந்த 28 வயதா இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் என்றும் அவரது சடலம், தெல்லிப்பழை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தினால் மல்லாகம், சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான நிலை தோன்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *