மேலும்

மாதம்: June 2018

தெற்காசியாவின் மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீன நிறுவனம்

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை சீன நிறுவனம் ஒன்று கொழும்பில் அமைக்கவுள்ளது.  இந்தக் கட்டடத்தை அமைக்கும் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கக்கொடியை ஏற்ற மறுத்த சர்வேஸ்வரனை விசாரணைக்கு அழைக்கிறது ரிஐடி

சிறிலங்காவின் தேசியக்கொடியை ஏற்ற மறுத்தமை தொடர்பாக, விசாரணைக்கு வருமாறு  பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு அழைப்பாணை விடுத்துள்ளனர்.

பட்டியல் எதுவும் இல்லை – சாலிய பீரிஸ் குத்துக்கரணம்

எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால், போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள்  அல்லது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிட முடியும் என்று தாம் கூறவில்லை என்று, காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கீத் நொயார் கடத்தல் – மகிந்தவிடம் விரைவில் விசாரணை

‘தி நேசன்’ ஆங்கில நாளிதழின்  இணை ஆசிரியர் கீத் நொயார்  கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

அவுஸ்ரேலிய போர்க்கப்பலில் சிறிலங்கா கொமாண்டோக்களுக்குப் பயிற்சி

அமெரிக்கா நடத்தும், RIMPAC-2018 கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் 25 மரைன் படைப்பிரிவு கொமாண்டோக்கள், அவுஸ்ரேலிய கடற்படைக் கப்பல் மூலம், ஹவாய் தீவுகள் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

23 ஆண்டுகளில் முதியவர்களால் நிரம்பப் போகும் சிறிலங்கா

சிறிலங்காவின் தற்போதைய வயது நிலை தொடர்ந்தால், அடுத்த 23 ஆண்டுகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானோர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சிறிலங்கா நிதியமைச்சின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

கூட்டு அரசு உடன்பாடு முறிந்து போனது?

பிரதி சபாநாயகர் பதவிக்கு, ஐக்கிய தேசியக் கட்சி தமது தரப்பில் ஆனந்த குமாரசிறியை போட்டியில் நிறுத்தியதன் மூலம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனான புரிந்துணர்வு உடன்பாட்டை மீறி விட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா அதிபர் விமர்சித்தாலும் கூட்டு அரசு தொடரும் – ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விமர்சனங்களை முன்வைத்தாலும், கூட்டு அரசாங்கம் அதன் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்து வெற்றி பெற்ற ‘மொட்டு’ உறுப்பினருக்கு எதிராக வழக்கு

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்தார் என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணியின்  மதுரகெட்டிய உள்ளூராட்சி சபை உறுப்பினர், தரங்க திசநாயக்கவுக்கு எதிராக, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.

ரணில் குடும்ப தொலைக்காட்சி மையத்தை மூடிய மைத்திரி – பனிப்போர் உச்சம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துக்குச் சொந்தமான ரிஎன்எல் தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, சிறிலங்கா அதிபரின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று மூடியுள்ளனர்.