வெளிநாடுகளுக்கான நடவடிக்கைப் பணியகத்தை உருவாக்கும் சிறிலங்கா இராணுவம்
ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவத்தை அதிகளவில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், சிறிலங்கா இராணுவம் தனியான நடவடிக்கைப் பணியகம் ஒன்றை உருவாக்கவுள்ளது.
குகுலேகங்கவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் அமைதி ஆதரவு நடவடிக்கைப் பயிற்சி மையத்துக்குச் சென்றிருந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்த போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான தனியான பணியகம் ஒன்றை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிறிலங்கா இராணுவத் தலைமையகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
வெளிநாடுகளில் ஐ.நா படைகளில் சிறிலங்கா படையினரை அதிகளவில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்தப் பணியகம் அமைக்கப்படவுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.