அமைதியாக நடந்த அமைச்சரவைக் கூட்டம் – இரண்டு அமைச்சர்கள் புறக்கணிப்பு
உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் இன்று அமைதியான முறையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்நத இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சுசில் பிரேமஜெயந்த, தயாசிறி ஜெயசேகர ஆகியோர் தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்கக் கோரிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
எனினும், பிரதமருக்கு எதிராக பகிரங்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்த சுசில் பிரேம ஜெயந்தவும், தயாசிறி ஜெயசேகரவும் இன்னமும் அதே நிலைப்பாட்டிலேயே இருப்பதாக கூறபடுகிறது.