மேலும்

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை – கைவிரித்தார் சிறிலங்கா அதிபர்

maithriகாணாமல் போனோர் எவரையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“வடக்கைச் சேர்ந்த பலர், காணாமல் போனோர் பற்றி கூறி வருகின்றனர். காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் என்னை சந்தித்துக் கலந்துரையாடிருக்கின்றனர்.

இதன்போது, அவர்கள் காணாமல் போயுள்ள தமது உறவுகள் இரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் காடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக வைத்திருப்பதாக என்னிடம் கூறினர்.

அதற்கமைய நானும் தேடிப்பார்த்தேன். ஆனால் அவர்கள் எங்கும் இல்லை.

எனவே, காணாமல் போயுள்ளவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்க வேண்டுமாக இருந்தால், அதனை அரசாங்கம் என்ற வகையில் நிச்சயமாகச் செய்வோம்.

போரில் வடக்கில் காணாமல் போனது போன்று தெற்கிலும் தமிழ், சிங்கள , முஸ்லிம் மக்கள் பலர் காணாமல் போயிருக்கின்றனர்.

எனவே அரசாங்கம் என்ற வகையில் என்னால் செய்யக் கூடிய அனைத்தையும் நியாயமான முறையில் செய்வேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *