மேலும்

மாதம்: January 2018

முடிவிற்கு வருகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம்?

இலங்கைத் தமிழர்களின் நடப்பு அரசியல் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான மோதலாகவே உருமாறி உள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து, ஈழத் தமிழர் அரசியல் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வகிபாகம் ஓய்வு நிலைக்கு வந்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் சக்தியாக விளங்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு சில வருட காலம் நீடித்தது.

காங்கேசன்துறை சொகுசு மாளிகை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு?

வடக்கு மாகாணசபை, யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கோரிக்கைகளைப் புறக்கணித்து, காங்கேசன்துறையில் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட சொகுசு மாளிகையை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கையளிக்கும் முனைப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் கோத்தா – தினேஸ் குணவர்த்தன

2020ஆம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தகுதியானவர் அல்ல என்று கூட்டு எதிரணியின்  தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நிதி முறைமைக்கு ஆபத்தான 11 நாடுகளில் சிறிலங்காவும்

பணச்சலவை தொடர்பாக, ஆபத்தான 11 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளதாக நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணி தெரிவித்துள்ளது.

மைத்திரியின் சவாலுக்குச் சவால் – தேர்தலுக்கு முன் நாடாளுமன்றை கூட்டுகிறார் ரணில்

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக, உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

நாளைக்கே சுதந்திரக் கட்சி அரசாங்கம் – சிறிலங்கா அதிபர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 96 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம்முடன் இருந்தால், நாளைக்கே கூட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ். விவசாயிகள் மானியம் கேட்கவில்லை- உத்தரவாத விலையையே கேட்கிறார்கள்

வடக்கிலுள்ள விவசாயிகள் மானியங்களைக் கோரவில்லை என்றும், தமது உற்பத்திகளுக்கு உத்தரவாத விலை ஒன்றையே அவர்கள் கோருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளார் கோத்தா- சட்டமா அதிபர்

வீரகெட்டியவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதன் மூலம், பொதுச்சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச உள்ளிட்ட 6 பேர் தவறிழைத்துள்ளனர் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு அதிக முதலீட்டு வாய்ப்புகளை வழங்கத் தயார் – சிறிலங்கா அதிபர்

இன்னும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை ஜப்பானுக்கு வழங்க  சிறிலங்கா தயாராக இருக்கிறது என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் வீடு ஒன்றில் இருந்து 288 வாக்காளர் அட்டைகள் மீட்பு – இருவர் கைது

உள்ளூராட்சித் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய, 288 வாக்காளர் அட்டைகள், முல்லைத்தீவில் வீடு ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டதாக, சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.