யாழ். விவசாயிகள் மானியம் கேட்கவில்லை- உத்தரவாத விலையையே கேட்கிறார்கள்
வடக்கிலுள்ள விவசாயிகள் மானியங்களைக் கோரவில்லை என்றும், தமது உற்பத்திகளுக்கு உத்தரவாத விலை ஒன்றையே அவர்கள் கோருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்.
”யாழ்ப்பாணத்தில், மோதல்களுக்கு முன்னர் இருந்த, முக்கிய தொழிற்சாலைகள் இப்போது இல்லாததால் வேலைவாய்ப்பு இன்னும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது.
ஆனால் விவசாயிகளுக்கான வசதிகளை முன்னேற்றுவதன் மூலம், விவசாயத்துறையை மேம்படுத்த முடியும்.
தமக்கு கொடைகளோ, மானியங்களோ தேவையில்லை என விவசாயிகள் கூறுகிறார்கள். அவர்களின் உற்பத்திகளுக்கு நியாயமான விலை கொடுக்கப்பட்டால், அவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள்.
வெங்காயம் போன்ற தமது உற்பத்திகளுக்கு உத்தரவாத விலை ஒன்றையே அவர்கள் கேட்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் 20 ஆயிரம் வீடுகள் தேவைப்படுவதாகவும், மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் 20 ஆயிரம் குடும்பங்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 1900 குடும்பங்களும் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.