சீனாவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின், அனைத்துலக உறவுகளுக்கான திணைக்களத்தின் உதவி அமைச்சர் வான் யாஜூன் தலைமையிலான உயர் மட்டக் குழுவே சிறிலங்கா வந்துள்ளது.
இந்தக் குழுவினர் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.