மேலும்

இடைக்கால அறிக்கை குறித்து கிழக்கில் விளக்கக் கூட்டங்களை நடத்துகிறது கூட்டமைப்பு

tnaபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கக் கூட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

முதலாவது கூட்டம் திருகோணமலை நகர மண்டபத்தில் எதிர்வரும் 24ஆம் நாள் மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில், கல்முனை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள நால்வர் கோட்டம் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் நாள் காலை 9 மணி இரண்டாவது கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

மூன்றாவது கூட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தில், தாண்டவன்வெளி பெர்டினன்ஸ் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் நாள் மாலை 02.30 மணிக்கு  நடத்தப்படவுள்ளது.

இந்தக் கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்பந்தன்,  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இடைக்கால அறிக்கை பற்றி தெளிவுபடுத்தவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *