மேலும்

சிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்குமாம் அமெரிக்கா

Robert Hiltonசிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா தோளோடு தோள் கொடுத்து துணை நிற்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அமெரிக்காவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட பாடசாலை திறப்பு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பொருளாதாரத்தை மீளமைக்கவும், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியை முன்னகர்த்தவும், அனைவருக்கும் சம உரிமை, மனித உரிமைகள் மற்றும் சமவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும், சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா தோளோடு தோள் துணை நிற்கும்.

அமெரிக்காவின் இந்த ஒத்துழைப்பு சிறிலங்காவின் நல்லிணக்கம் மற்றும் ஒருமைத்துவத்துக்கான உதவியின் ஒரு அங்கமாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *