திடீரென அமெரிக்கா சென்ற பிரசாத் காரியவசம் – இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பு
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர், அலிஸ் வெல்ஸ் அம்மையாரை, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜெனிவாவில் நடந்த பூகோள கால மீளாய்வு அமர்வில் பங்கேற்பதற்காக, பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழுவில் இடம்பெற்றிருந்த சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் அங்கிருந்து வொசிங்டனுக்குச் சென்றுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகாரச் செயலரின் திடீர் அமெரிக்கப் பயணம், மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயரதிகாரிகளுடனான சந்திப்புகளுக்கான காரணம் தெரியவரவில்லை.