வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீது இன்று வாக்கெடுப்பு
சிறிலங்கா அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவுசெலவுத் திட்டத்தை கடந்த 9ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
அதையடுத்து, தினமும், காலை 9.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை ஆறு நாட்களாக நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்று வந்தது.
இன்றுடன் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் முடிவுக்கு வரும். இதையடுத்து, இன்று மாலை 5 மணியளவில், வரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அதேவேளை, நாளை வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழு நிலை விவாதம் ஆரம்பமாகும். இதன் முடிவில் டிசெம்பர் 9ஆம் நாள் மாலை 5 மணியளவில் இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.