மேலும்

மாதம்: October 2017

ஒற்றையாட்சியில் மாற்றம் இருக்கக் கூடாது – சம்பிக்க ரணவக்க

சிறிலங்காவின் ஒற்றையாட்சி தன்மையில் எந்த மாற்றமும் செய்யப்படக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் – கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன

புதிய அரசியலமைப்பு சமஷ்டிக்கான எந்த அடையாளத்தையும் கொண்டிருக்காது என்றும், ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு விவகார நிபுணருமான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன.

இடைக்கால அறிக்கை – என்ன சொல்கிறார் சம்பந்தன்?

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முன்னேற்றகரமாக இருக்கின்றன.  ஆனால் இது இறுதி முடிவல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மனுஸ் தீவில் உயிரிழந்த தமிழரின் உடலை ஒப்படைக்க 9 ஆயிரம் டொலர் கேட்கிறது அவுஸ்ரேலியா

மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உயிரிழந்த தமிழ் இளைஞரின் உடலை  ஒப்படைப்பதற்கு 9 ஆயிரம் டொலர்களைத் தர வேண்டும் என்று உறவினர்களிடம்  அவுஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.

இந்தியா அமைக்கும் துறைமுகத்தினால் கொழும்புக்கு அச்சுறுத்தல்

இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்தினால் கொழும்பு துறைமுகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசநாயக்க எச்சரித்துள்ளார்.

ஒரே ஆண்டில் 14 இடங்கள் சறுக்கியது சிறிலங்கா

2017-18ஆம் ஆண்டுக்கான பூகோள போட்டித் திறன் அறிக்கையில், சிறிலங்கா 85 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

ரொஹிங்யா அகதிகளை அச்சுறுத்திய அக்மீமன தயாரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கல்கிசையில் மியான்மாரின் ரொஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்து அச்சுறுத்தல் விடுத்த சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த அக்மீமன தயாரத்ன தேரரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படையின் இராட்சத கப்பல்

அமெரிக்க கடற்படையின் இராட்சத கப்பலான யுஎஸ்என்எஸ் லூவிஸ் அன் கிளார்க் இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

திருகோணமலையில் இன்று ஆரம்பமாகிறது அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி

அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலைத் துறைமுகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழர் மரணம்

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில், இலங்கைத் தமிழர் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பபுவா நியூகினியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.