மேலும்

சிறிலங்கா செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை

eagle-flag-usaசிறிலங்கா செல்லும் அமெரிக்கக் குடிமக்களுக்கு அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சிறிலங்காவில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவியுள்ளதைக் கருத்தில் கொண்டே இந்தப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் டெங்கு நோயினால் 250 பேர் மரணமாகியுள்ளனர் என்றும் 103,114 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சிறிலங்கா சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

சிறிலங்காவில் தீவிரமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

அத்துடன், டெங்கு நோயினால் பாதிக்கப்படக் கூடிய மேலும் அதிகளவு நோயாளர்களை கவனிக்கக் கூடிய ஆற்றலை அதிகரிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் கடந்த காலங்களை விட, டேங்கு நோயின் தாக்கம் இந்த ஆண்டு 4.3 மடங்கு அதிகரித்துள்ள போதிலும், உலகளாவிய பயண எச்சரிக்கையையோ, வர்த்தக கட்டுப்பாடுகளையோ அறிவிக்கப் போவதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

டெங்கு நோய் நுளம்புகள் மூலம், பரவுவதால், சிறிலங்காவுக்குச் செல்லும், பயணிகள், நுளம்புக்கடியில் இருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும்.

டெங்கு தொற்றை தடுக்கக் கூடிய தடுப்பு மருந்துகள் எதுவும் அமெரிக்காவில் இல்லை என்றும் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *