லலித் ஜெயசிங்கவை சேவையில் இருந்து இடைநிறுத்த தேசிய காவல்துறை ஆணைக்குழு உத்தரவு
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க சிறிலங்கா காவல்துறையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் தப்பிப்பதற்கு உடந்தையாகவும் உதவியாகவும் இருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லலித் ஜெயசிங்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை சிறிலங்கா காவல்துறையில் இருந்து இடைநிறுத்துவதற்கு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு, தேசிய காவல்துறை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க சிறிலங்கா காவல்துறையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.