வித்தியா கொலை வழக்கில் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க கைது
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக சிறிலங்கா காவல்துறையின் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
வித்தியா படுகொலை முக்கிய சந்தேக நபரான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார் என்பவரை தப்பிக்க விட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே, மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.
முன்னதாக, இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக லலித் ஜெயசிங்கவுக்கு, தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் குற்றச்சாட்டுப் பத்திரம் கடந்த 12ஆம் நாள் வழங்கப்பட்டது.
குற்றப்பத்திரத்துக்கு ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், தேசிய காவல்துறை ஆணைக்குழு, மூத்த பிரதி காவல்துறை மா அதிபரான, லலித் ஜெயசிங்க கோரப்பட்டிருந்தார்.