மேலும்

விரைவில் வழிநடத்தல் குழுவின் அறிக்கை

ranilஅரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழு விரைவில் தனது அறிக்கையை வெளியிடும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த சார்க் நாடுகளின் அமைச்சர்களுக்கு இடையிலான கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

‘ஒன்றரை ஆண்டுகளாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் மூலம், தயாரிக்கப்பட்ட அறிக்கையை வழிநடத்தல் குழு விரைவில் வெளியிடும்.

காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கும் தீர்வுகளை கண்டு வருகிறோம். சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரும், மனித உரிமைகளைப் பாதுகாக்க முன்னரும், நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு எமக்கு நேரம் தேவைப்படுகிறது.

அண்மையில் வடக்கில் துரதிஷ்டமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் வடக்கில் மாத்திரமன்றில் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடக்கின்றன.

இன்று நாட்டின் ஏனைய பகுதிகளை விட வடக்கில் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன.

ஐ.நாவின் உயர் அதிகாரி ஒருவர் கொழும்பு வந்திருக்கிறார். அவரைச் சந்தித்து நிலைமைகளை விளங்கப்படுத்துவதற்கு ஆர்வமாக உள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *