மேலும்

முல்லைத்தீவுக்கு அப்பால் ஆழ்கடலில் தத்தளித்த யானை – கடற்படையினரால் மீட்பு

elephant-rescue (1)முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாயில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த யானை ஒன்றை சிறிலங்கா கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

கிழக்கு கடற்பரப்பில் நேற்றுக்காலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக ரோந்துப் படகு ஒன்றில் இருந்த கடற்படையினர், கொக்குத்தொடுவாயில் இருந்து 8 கடல் மைல் தொலைவில்- ஆழ்கடலில் யானை ஒன்று தத்தளித்துக் கொண்டிருப்பதை அவதானித்தனர்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த மற்றொரு அதிவேக தோக்குதல் படகின் உதவி கோரப்பட்டது. மேலதிகமாக இரண்டு செட்றிக் படகுகளில் விரைந்த, துரித நடவடிக்கை படகு அணியைச் சேர்ந்த 7 கடற்படையினரும், யானையை  மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

elephant-rescue (1)

elephant-rescue (2)

elephant-rescue (3)

elephant-rescue (4)

elephant-rescue (1)

அத்துடன் வனவிலங்குகள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரும் இந்த நடவடிக்கைக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.

இதனையடுத்து, யானையை கயிற்றில் கட்டி, படகு மூலம் ஆழ்கடலில் இருந்து கரையை நோக்கி இழுத்து வந்தனர்.

புல்மோட்டை, யான்ஓயா பகுதியில் யானை கரைக்குக் கொண்டு வரப்பட்டு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளி்டம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *