மேலும்

இராணுவக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் திட்டம்- சிறிலங்கா அதிபருக்கு விளக்கினார் இராணுவத் தளபதி

Maithri- mahes senanayakeசிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று முதல் முறையாக சிறிலங்கா அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, சிறிலங்கா இராணுவத்தில் செய்யப்படவுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

தேச கட்டுமானம், தேசிய நல்லிணக்கம், வேகமான சமூக மறுசீரமைப்பு மாற்றங்களுடன் தொடர்புடைய அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் தற்போதுள்ள கரிசனைகளைக் கருத்தில் கொண்டு, தேவையான நவீன தரத்துக்கு உயர்த்துவதற்கு சில கட்டமைப்பு மாற்றங்கள் இராணுவத்துக்குள் செய்ய வேண்டியுள்ளது என்று அவர் சிறிலங்கா அதிபரிடம் தெரிவித்துள்ளார்.

Maithri- mahes senanayake

இராணுவத்தை மூன்று பங்குகளாக பிரித்து, மூன்றில் ஒரு பங்கை, போருக்குத் தயார் நிலையில் வைத்திருப்பதற்கும், இன்னொரு மூன்றில் ஒரு பங்கை தேச நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கும், மற்றொரு மூன்றில் ஒரு பங்கை இராணுவ நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கும் தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இராணுவ மறுசீரமைப்பு திட்டங்களுக்கு சிறிலங்கா அதிபர் தனது ஆசீர்வாதத்தை அளித்துள்ளதுடன்,புதிய இராணுவத் தளபதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *