மேலும்

பதவி விலகவுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

Karunasena Hettiarachchiசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி விரைவில் தனது பதவியில் இருந்து விலகுவார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேர்மனிக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் பாதுகாப்புச் செயலர் பதவியில் இருந்து விலகவுள்ளார்.

கருணாசேன ஹெற்றியாராச்சியை சிறிலங்காவின் தூதுவராக ஏற்றுக் கொள்வதற்கு ஜேர்மனி இணங்கியுள்ளதுடன், உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதேவேளை, புதிய பாதுகாப்புச் செயலராக, சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *