மேலும்

மோடிக்கு இராப்போசன விருந்து அளித்தார் மைத்திரி – சம்பந்தன், விக்கியும் பங்கேற்பு

modi-maithri-colombo (1)சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.

நேற்றுமாலை கொழும்பு வந்த இந்தியப் பிரதமர் கங்காராமய விகாரையில் வழிபாடுகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்றார்.

இதையடுத்து, நேற்றிரவு 8.30 மணியளவில் சிறிலங்கா அதிபர் மாளிகைக்குச் சென்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார்.

modi-maithri-colombo (1)modi-maithri-colombo (2)

இந்தச் ந்திப்பையடுத்து, இந்தியப் பிரதமருக்கு, சிறிலங்கா அதிபர் இராப்போசன விருந்து வழங்கினார்.

இந்த இராப்போசன விருந்துபசாரத்தில் சிறிலங்கா பிரதமர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுடன்,  எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வட மாகாணமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *