மேலும்

அதிகாரத்தை கைப்பற்ற சதித்திட்டம் தீட்டவில்லை- என்கிறார் மகிந்த

mahindaநாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கூட்டு எதிரணி சதித் திட்டம் எதையும் தீட்டவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாங்கள் தனியார் மயமாக்கலையும், நாட்டின் தேசிய வளங்கள் விற்கப்படுவதையும் மட்டுமே எதிர்க்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களின் முன்னர், நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான நேரம் வந்து விட்டதாகவும், பொருத்தமான நேரத்தில் அதனைச் செய்வோம் என்றும் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *