மேலும்

மாதம்: March 2017

வெளிநாட்டு நீதிபதிகளை வலியுறுத்திய செயிட் அல் ஹுசேன் – பதிலளிக்காது நழுவியது சிறிலங்கா

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கோரிக்கை தொடர்பாக சிறிலங்கா நழுவலான பதிலையே அளித்துள்ளது.

எல்லா பரிந்துரைகளுமே முக்கியமானவை தான் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விடாப்பிடி

சிறிலங்கா தொடர்பாக தமது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள எல்லா பரிந்துரைகளுமே முக்கியமானவை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் – இணை அனுசரணைக்கு பின்னடிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், எனினும், இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்காது என்றும் புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகசின் சிறையில் விமல் வீரவன்ச உண்ணாவிரதம்

மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு நுழைவிசைவு வழங்க மறுத்தது அவுஸ்ரேலியா

போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு நுழைவிசைவு வழங்க அவுஸ்ரேலியா மறுத்துள்ளது.

ஜெனிவாவில் மௌனம் காத்தது இந்தியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று நடந்த சிறிலங்கா தொடர்பான விவாதத்தில், இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்தது.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு ஏமாற்றம் – பிரதி வெளிவிவகார அமைச்சரின் உரை இடைநிறுத்தம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று நடந்த சிறிலங்கா தொடர்பான விவாதத்தில், சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது உரையை இடையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

வெளிநாட்டு நீதிபதிகளை வலியுறுத்தினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் – தொடங்கியது விவாதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பித்த அறிக்கை மீது தற்போது விவாதம் இடம்பெற்று வருகிறது. சிறிலங்கா நேரப்படி இரவு 7.40 மணியளவில் இந்த விவாதம் ஆரம்பித்தது.

முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விரைவில் கைது

சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மட்டப் பேச்சுக்கள் ஆரம்பம்

ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் சிறிலங்கா- இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுக்களில் ஆறாவது கலந்துரையாடல் இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.