கீத் நொயார் கடத்தல் – மேலும் இரு சிறிலங்கா இராணுவத்தினர் இன்று கைது
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
2008ஆம் ஆண்டு மே மாதம், வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஒருவர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் நேற்றுக்காலை கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் (படம்- லங்காதீப)
இந்த நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த, மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கல்கிசை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.