யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு
யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், பெறப்பட்ட வாக்குமூலம், கல்கிசை நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி, நேற்று நீதிமன்றத்தில் மூன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம் வழங்கினார்.
சிறிலங்காவின் தேசிய துடுப்பாட்ட அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், தெகிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வா அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தற்போதைய தளபதியுமான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வழங்கிய அனுமதியை ரத்துச் செய்துள்ள கல்கிசை நீதிமன்றம், அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இரகசிய மரணப் படை ஒன்றை இயக்கி ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.