மேலும்

பாஜகவின் உயர்மட்டப் பிரமுகர் சிறிலங்கா அரச தலைவர்களுடன் இரகசியப் பேச்சு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான, பாஜகவின் தேசிய செயலர் ராம் மாதவ், சிறிலங்காவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, உயர்மட்டச் சந்திப்புகளை நடத்தியுள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 10ஆம் நாள், இவர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்தார்.

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்வதற்கு ஒரு வாரம் முன்னதாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.

சிறிலங்கா வந்த பாஜக தேசிய செயலர் ராம் மாதவ், மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களையும் சந்தித்துள்ளார்.

தாம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்ததை, புதுடெல்லி திரும்பிய ராம் மாதவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் போது, இருதரப்பு விவகாரங்கள், சிறிலங்காவில் நடக்கவுள்ள இந்து சமுத்திர கலந்துரையாடல் குறித்து விவாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பாக தாம் எந்தக் கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *