மேலும்

Tag Archives: புலனாய்வு

நீதிமன்ற உத்தரவுக்கு காத்திராமல் விசாரணையை தொடங்க வேண்டும்

சந்தேகத்திற்குரிய புதைகுழிகள் தொடர்பான அகழ்வுகள் குறித்து நீதிமன்றங்கள் உத்தரவுகளை பிறப்பிக்கும் வரை காத்திருக்காமல்,  புலனாய்வு அமைப்புகள், விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என  சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஆதாரங்களை மறைத்த பாதுகாப்பு தலைவர் மீது விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணையைத் தடுக்கும் வகையில், பல முக்கியமான ஆதாரங்களை மறைத்ததாக கண்டறியப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை தலைவர் ஒருவர் மீது விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்கடத்தல் வழக்கிலேயே முன்னாள் கடற்படை புலனாய்வு பணிப்பாளர் கைது

2010ஆம் ஆண்டு இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாகவே,  சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற றியர் அட்மிரல் சரத் மொஹோற்றி கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை சிறையில் கேக் வெட்டி கொண்டாடிய பிள்ளையான்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர்,  மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கேக் வெட்டி கொண்டாடியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் கைது

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற றியர் அட்மிரல் சரத் மொகோற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வசந்த கரன்னகொடவை விடுவித்தமைக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் இருந்து, முன்னாள் கடற்படைத் தளபதி விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி குறித்த விசாரணைகளை தடுக்க முயற்சி

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்ன தொடர்பான விசாரணைகளை தடுக்க முயற்சிப்பதாக உதய கம்மன்பில மீது காணாமல் போனவர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டவாளர்  அச்சலா செனவிரட்ன,குற்றம்சாட்டியுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று கையளிக்கப்படும்

சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கடிதத்தால் சிக்கிய முன்னாள் கடற்படை தளபதி- விளக்கமறியல் நீடிப்பு

இளைஞன் ஒருவரைக் காணாமல் ஆக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி, அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவை, மேலும் இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருண ஜயசேகர பதவியில் இருப்பது நம்பகத்தன்மையை பாதிக்கும்

மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சராகப் பணியாற்றுவது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் நம்பகத்தன்மையைப் பாதிக்கக் கூடும் என்று கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.