மேலும்

சிறிலங்காவுடன் மீண்டும் இணைகிறார் எரிக் சொல்ஹெய்ம் – ரணில் சந்திப்பு

ranil-erik (1)சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்தும் பேச்சுக்களில் நடுநிலையாளராக கலந்து கொண்ட நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்முடன், மீண்டும் இணைந்து செயற்பட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சுற்றுச்சூழல் விவகாரங்களிலேயே எரிக் சொல்ஹெய்முடன் சிறிலங்கா அரசாங்கம் இணைந்து பணியாற்றவுள்ளது.

டாவோசில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில், பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எரிக் சொல்ஹெய்மை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ranil-erik (1)ranil-erik (2)

இதன்போது, ஐ.நா சுற்றாடல் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பதவி வகிக்கும் எரிக் சொல்ஹெய்ம், தான் தற்போது வகிக்கும் பாத்திரத்தின் ஊடாக சிறிலங்காவுடன் இணைந்து செயற்பட இணங்கியுள்ளார்.

சுற்றுச்சூழல் விவகாரங்களில் எரிக் சொல்ஹெய்மிடம் சிறிலங்கா பிரதமர் உதவி கோரியுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *