விதையாக வீழ்ந்தோரின் நினைவில்
மாவீரர் நாள்…..! உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் தமிழீழ விடுதலைத் தாகம் தணிப்பதற்காக, தமதுயிரைக் கூடத் துச்சமென எண்ணி உயிர் கொடுத்தவர்களை நினைவு கூரும் நாள் இன்று.
மாவீரர் நாள்…..! உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் தமிழீழ விடுதலைத் தாகம் தணிப்பதற்காக, தமதுயிரைக் கூடத் துச்சமென எண்ணி உயிர் கொடுத்தவர்களை நினைவு கூரும் நாள் இன்று.
கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு, தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நண்பகல் யாழ். பல்கலைக்கழகத்தில், சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கியூபாவின் முன்னாள் அதிபரும், இடதுசாரிப் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ, தனது 90 ஆவது வயதில் மரணமானதாக அந்த நாட்டின் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு மேற்கொண்டுள்ள பயணம் தொடர்பாக, தாம் எதையும் அறியவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்புத் தொடர்பான மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க உட்தரப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில், லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் டொன் பிரதீப் சந்துருவன் சேனாதீரவைக் கைது செய்ய கம்பகா பிரதம நீதிவான் அனைத்துலக பிடியாணை பிறப்பித்துள்ளார்.
திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்க கடற்டையின் யுஎஸ்எஸ் சோமசெற் கப்பலில் வந்துள்ள அமெரிக்க மரைன் படைப்பிரிவினர் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பையே அறிமுகப்படுத்துமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.