விதையாக வீழ்ந்தோரின் நினைவில்
உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் தமிழீழ விடுதலைத் தாகம் தணிப்பதற்காக, தமதுயிரைக் கூடத் துச்சமென எண்ணி உயிர் கொடுத்தவர்களை நினைவு கூரும் நாள் இன்று.
விடுதலை ஒன்றே மூச்சாகவும் பேச்சாகவும், வாழ்ந்து மறைந்தவர்கள், எம்முன் ஒளியாகத் தோன்றும் நாள் இன்று.
உலகெங்கும் ஒருசேர ஒளிதீபம் ஏற்றி நாம் வழிபாடு நடத்தும் நாள் இன்று.
விதையாக வீழ்ந்தோரின் வழி மீது விழி வைத்து பயணத்தைத் தொடர்கின்ற உறுதியை ஏற்கும் நாள் இன்று.
தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்கொடுத்த அனைவருக்காகவும் இந்த நாளில், ‘புதினப்பலகை குழுமம்’, தலைசாய்த்து வணக்கம் செலுத்துகிறது.