சம்பூரில் சூரியசக்தி மின் திட்டம் – சிறிலங்கா அதிபரிடம் இந்தியா யோசனை
திருகோணமலை- சம்பூரில் சூரியசக்தி மின்உற்பத்தித் திட்டத்தை செயற்படுத்துவதற்கு இந்தியா விருப்பம் வெளியிட்டுள்ளது. சம்பூரில் அமைக்கத் திட்டமிட்டிருந்த 500 மெகாவாட் அனல் மின் திட்டத்தை கைவிடுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்து ஒரு மாதம் கழித்து இந்தியா இந்த திட்டத்தை முன்வைத்துள்ளது.





