மேலும்

இந்திய வெளிவிவகாரச் செயலர் கொழும்பு வருகிறார்

s.jaishankarஇந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் வர்த்தக, முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே, வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்றுடன் அவர் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பயணத்தின் போது, இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள, பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து, இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் பேச்சுக்கள் எதையும் நடத்தமாட்டார் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக, இரண்டு நாடுகளின் வர்த்தக அமைச்சர்களே பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

தமது குழுவினருடன் மூன்று நாட்கள் கொழும்பில் தங்கியிருக்கும் இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர், சிறிலங்கா அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுடன், பரந்துபட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *