மேலும்

மாதம்: October 2016

உயிரை மாய்த்த புலனாய்வு அதிகாரி லசந்த கொலை நடந்த போது வீட்டில் இருந்தமை அம்பலம்

சண்டே லீடர் ஆசிரியரை தாமே சுட்டுக் கொன்றதாக கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி அந்தச் சமயத்தில் தனது வீட்டிலேயே இருந்தார் என்று உறுதிப்பட்டுள்ளது.

இந்திய-சிறிலங்கா இராணுவங்கள் பங்கேற்கும் மித்ரசக்தி கூட்டுப் பயிற்சி

இந்திய – சிறிலங்கா சிறப்புப் படைப்பிரிவுகள் பங்கேற்கும், மித்ர சக்தி என்ற கூட்டுப் பயிற்சி அம்பேபுஸ்சவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவு தலைமையகத்தில் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

கொக்குவில் படுகொலை – ஒரு மாணவனின் உடலில் இரு குண்டுக் காயங்கள்

கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு, இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரின் உடலில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பது நீதிவான் நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை – 5 சிறிலங்கா காவல்துறையினர் கைது

கொக்குவில்- குளப்பிட்டிச் சந்தியில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே மரணமானதாக தெரியவந்துள்ளது.

சிறிலங்காவில் ஆண்களை விட பெண்களின் ஆயுள்காலம் 6.6 ஆண்டுகள் அதிகம்

சிறிலங்காவில் ஆண்களை விட பெண்களின் சராசரி ஆயுள்காலம், 6.6 ஆண்டுகள் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அகதிகள் நாடு திரும்புவதற்கான கப்பல் வசதி – வாக்குறுதியில் இருந்து நழுவுகிறது இந்தியா?

சிறிலங்கா அரசாங்கத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தமது தாயகம் திரும்ப விரும்பினால், இந்தியாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கு ஜூரிகள் சபைக்கு மாற்றப்படுமா? – அடுத்த வாரம் முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கை, ஜூரிகள் சபையில் விசாரணை செய்வதா என்பது குறித்து வரும் 27ஆம் நாள் உத்தரவு பிறப்பிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வடக்கில் படைக்குறைப்பு செய்ய வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

வடக்கில் படைக்குறைப்புச் செய்து, நல்லிணக்க முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் வலியுறுத்தியுள்ளார்.

கவிஞர் கி. பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் இலக்கியப் பதிவர் போட்டி 2017’

காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி.பி.அரவிந்தன்’ அவர்களின் நி்னைவாக புலம்பெயர் இலக்கியப் பதிவர் போட்டியை, காக்கைச் சிறகினிலே மாத இதழ் அறிவித்துள்ளது.

பூகோள பொருளாதார உறுதிப்பாட்டுக்கு இந்திய மாக்கடலின் பாதுகாப்பு முக்கியம் – அமெரிக்கா

இந்திய மாக்கடலின் பாதுகாப்பு  பூகோள பொருளாதாரத்தை உறுதித்தன்மையுடன் வைத்திருப்பதற்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.