இளம் ஊடகவியலாளர் அஸ்வினின் உடல் மாதகலில் நல்லடக்கம்
உக்ரேனில் காலமான இளம் ஊடகவியலாளரும், பிரபல கேலிச்சித்திர வரைஞருமான அஸ்வின் சுதர்சனின் இறுதிநிகழ்வு நேற்று மாதகலில் இடம்பெற்றது.
புகலிடம் தேடி மேற்கு நாடு ஒன்றுக்குச் செல்லும் வழியில், திடீரென ஏற்பட்ட நோயினால், ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் கடந்த மாதம் 22ஆம் நாள் உக்ரேனில் காலமானார்.
அவரது உடல் நேற்று முன்தினம் மாதகலுக்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதையடுத்து. நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மாதகல் புனித செபஸ்தியார் தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்க ஆராதனைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து அஸ்வினின் உடல் மாதகல் புனித செபஸ்தியார் சேமக்காலையில் நல்லக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், மதகுருமார் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.